வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: நினைவுகளில் நீ..!

Saturday, November 14, 2009

நினைவுகளில் நீ..!




நீ என்னை
மறைந்திருந்து
ரசித்த திண்ணையில்
நான் அமர்ந்தபோது
என்னுள்ளே
மின்னலாய்
உன் உருவம்..!

உன் பாதங்கள்
சுற்றித் திரிந்த
வளைவுகளில்
வலம் வந்தபோது
என் காதில்
இசையாய் உன்
கொலுசொலி..!

கிணற்றடிக்கு
வந்த போது
நீ பிடித்து
நீர் இறைத்த
தாம்புக் கயிற்றில்
நிழலாடி நிழலானது
உன் வளைக்கரம்..!

தோட்டத்தில் நீ
வளர்த்த
வாடாமல்லியை
வாஞ்சையுடன்
பார்த்த போது
அதில்
பூத்து மறைந்தது
உன் புன்னகை..!

தோட்ட மூலையில்
நீ கிழித்து வீசிய
தாவணியின்
சிறிய பாதியில்
இலைமறை காயாய்
தெரிந்தது
உன் இளமை..!

உன் நினைவாய்
நீ வாழ்ந்த வீட்டை
நான் வாங்கியபோது
நீ விட்டுச் சென்ற
ஞாபகங்கள்
வீடெங்கும்
வியாபித்திருக்க...

நீ...
இல்லா
வெறுமையோடு
நான்..!

-சே.குமார்




No comments: