வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: September 2009

Wednesday, September 23, 2009

காதலா... காமமா...




தனிமையில் நாம்...
விழித்துக்கொண்ட
காமத்தை விரட்டும்
வழி தெரியாமல்...

ஏதேதோ பிதற்றியபடி
உன் கரம் பற்ற...
படக்கென்று பறிக்கிறாய்
படபடப்போடு..!

சிறிது நேர
மௌனத்தின் முடிவில்...
காற்றில் அலையும்
உன் கேசத்தால்
உயிர் பெற்றது காமம்..!

யோசனையின் முடிவில்
தோளில் கை போட்டு
இழுத்து அணைக்க...

பருந்திடம் மாட்டிய
கோழிக் குஞ்சாய்
பதறித் தள்ளினாய்...

இருவரும்
மௌனத்தோடு...
கரைந்த நிமிடங்களில்
கலைந்தது காமம்..!

காதல் காமத்தால்
அழிந்து விடுமோ
மனது யோசிக்க...
காதல் ஜெயித்தது...

பேசாமல் கிளம்பிய
என் கரம் பற்றி
நீ கொடுத்த முத்தத்தில்
கரைந்தது காமம்...
நிறைந்தது காதல்..!

-சே.குமார், பரியன் வயல்.




Tuesday, September 1, 2009

காதல் அனாதைகள்


மக்குள் நடந்த
சண்டையின் சாரலால்
அமைதியானது வீடு...!

ஆளுக்கொரு மூலையில்...
நடந்ததை மென்றபடி..!
இது முதலல்ல
தொடரும் கதைதான்..!

சண்டைக்குப் பின்
சமாதானம் என்பது
நமக்குள் சுலபமல்ல..

சுடும் வார்த்தைப்
பிரயோகம் இரண்டு
பக்கத்திலும்...

வீசிய வார்த்தைகளின்
வீரியம் குறைய
நேரம் பிடிக்குமல்லவா..?

நமக்குள் நிகழும்
சண்டைகளெல்லாம்
எதற்காக..?
விடை தெரிய
வினா இது..!

ஏதோ பேசி
எதிலோ முடிந்து
வாயிலிருந்து கைக்கு
மாறும் நிலைக்கு
தள்ளப்பட்டோம் நாம்..!

யாரால்..?
யோசனையின் முடிவில்
இருவரும் தான்
என்பதே விடையானது...

நமக்குள் இருந்த
விட்டுக் கொடுக்கும்
மனம் மாறியதுகூட
காரணமாக இருக்கலாம்..!

நேரம் கடக்க
இருவருக்குள்ளும்
விசும்பல்கள்..!
வீணாய் கரைகிறது
நிமிடம்..!

தூக்கம் மறந்த
விழிகள் சிவப்பை
போர்த்தியபடி...
அழுகையின்
பிரதிபலிப்பாகக்கூட
இருக்கக்கூடும்...

கோபத்தின் வீரியம்
தணியும் கட்டத்தில்
மெதுவாய் உனைப்பார்க்க...
நீயும் பார்க்கிறாய்...

வார்த்தைகள் வராததால்
வந்த சைகைக்கு
ஆறுதல் தேடி
அலைந்த மனம்
தோளில் சாய்ந்து
விம்முகிறது..

கண்ணீரில் கரையும்
கோபம் சூடாய்
தோள்களில் இறங்குகிறது...

நமக்குள் கனன்ற
கோபம் மாயமாய்..!

என்ன செய்வோம்
நமக்கு அறுதல்
சொல்ல யாருமில்லை...
இருவருக்கும்
இருவரே உறவு...

ஆம்...
நாம் காதல் அனாதைகள்...


-சே.குமார், பரியன் வயல்