வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: July 2010

Monday, July 5, 2010

என் 'மனசு'க்கு வாங்க..!

நண்பர்களே...

இன்று முதல் எனது இடுகைகள் எல்லாம் மனசு வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்கிறேன். தயை கூர்ந்து நண்பர்கள் அனைவரும் என் மனசுக்குள் வந்து (சு)வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னை பின் தொடரும் நண்பர்கள் அனைவரும் தயைகூர்ந்து சிரமம் பாராது என் மனசை பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மனசு எனக்கு மிகவும் பிடித்த பெயர். இதற்கான காரணம் எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கின்றது. இருந்தாலும் சொல்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர் இது. எனக்கும் எழுதும் ஆவலையும் பத்திரிக்கை மீதான காதலையும் கொடுத்தது இந்தப் பெயர். எனவே கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எல்லாம் இனி என் மனதில் மட்டுமே.

இன்று எனது பந்தயம் என்ற சிறுகதையை பகிர்ந்துள்ளேன். படித்து ஓட்டும், பின்னூட்டமும் மறவாமல் பின் தொடரவும் உங்களை என் மனசுக்கு அழைக்கிறேன்.

உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில்......

என்றும் நேசங்களுடன்,

சே.குமார்.