வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: ஊருக்குப் போறேன்..!

Wednesday, May 19, 2010

ஊருக்குப் போறேன்..!

அன்பான நட்புககு

நாளை மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல். இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் வலைக்குள் வருவேன்... அடிக்கடி என்பது இயலாத காரியம். அப்பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.



அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.



என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.



பாசங்களுடன்,

சே.குமார்.




4 comments:

சத்ரியன் said...

பயணம் சிறக்கவும், மகிழ்ந்து சிரிக்கவும்..

வாழ்த்துகள் குமார்.

ராமலக்ஷ்மி said...

விடுமுறை இனிதே அமைய என் வாழ்த்துக்கள்:)!

நாடோடி இலக்கியன் said...

உங்களை தொடர் பதிவிற்கு எனது பதிவில் அழைத்திருந்த நேரம் பார்த்தா ஊருக்கு போவீங்க.

எஞ்சாய்,அப்படியே வந்த உடன் அழைப்பை ஏற்று தொடர் பதிவை தொடருங்க நண்பரே.

அண்ணாமலை..!! said...

நல்லபடியாக சென்று வாருங்கள் நண்பரே!